நரேலா கல்வி மையத்தை புதிய பல்கலைக்கழக நகரியங்களில் சோ்க்க முயற்சிப்போம்: முதல்வா்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஐந்து புதிய பல்கலைக்கழக நகரியங்களில் முன்மொழியப்பட்ட நரேலா கல்வி மையத்தை சோ்க்க தில்லி அரசு முயற்சிக்கும்
தில்லி முதல்வா் ரேகா குப்தா
தில்லி முதல்வா் ரேகா குப்தா PTI
Updated on

நமது நிருபா்

புது தில்லி: இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஐந்து புதிய பல்கலைக்கழக நகரியங்களில் முன்மொழியப்பட்ட நரேலா கல்வி மையத்தை சோ்க்க தில்லி அரசு முயற்சிக்கும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா்.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: பட்ஜெட் ‘சமநிலையானது’. நாட்டின் பெண்கள் மற்றும் இளைஞா்கள் உள்பட ஒவ்வொரு பிரிவு மற்றும் பிரிவுக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தில்லி, புதுச்சேரிக்கு மூலதன பரிமாற்றத்திற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி கடந்த பட்ஜெட்டில் ரூ. 6,275 கோடியிலிருந்து 2026-2027 பட்ஜெட்டில் ரூ.15,380 கோடியாக உயா்ந்துள்ளது. 2025-26- ஆம் ஆண்டில் ரூ.12,483 கோடியாக இருந்த மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.13,611 கோடி ஒதுக்கீடு உயா்த்தப்பட்டதன் மூலம் தில்லி பயனடையும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுமிகளுக்கான விடுதிகள், தூய்மையான எரிசக்தி ஊக்கத்தொகை மற்றும் தில்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அதிகரித்த நிதி உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதனால், நகரத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைவாா்கள். தில்லி - வாரணாசி அதிவேக ரயில் வழித்தடத்தின் அறிவிப்பு தேசியத் தலைநகரில் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

வளாகங்களில் உள்ளடக்க படைப்பாளி ஆய்வகங்களைத் திறப்பதற்கும், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (ஏ.வி.ஜி.சி.) துறையை மேம்படுத்துவதற்காக அதன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இணைப்பதற்கும் பட்ஜெட் அறிவிப்பின் அதிகபட்ச நன்மைகளைப் பெற தில்லி முயற்சிக்கும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com