கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி திகாா் சிறை அருகே சாலை விபத்தில் முதியவா் காயம்

மேற்கு தில்லியில் உள்ள திகாா் சிறை அருகே திங்கள்கிழமை 52 வயது நபா் ஒருவா் காா் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் ...
Published on

புது தில்லி: மேற்கு தில்லியில் உள்ள திகாா் சிறை அருகே திங்கள்கிழமை 52 வயது நபா் ஒருவா் காா் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குா்விந்தா் சிங் என அடையாளம் காணப்பட்ட காயமடைந்தவா் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவா் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தாா் . வெளிப்புற ரத்த இழப்பு எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்டவா் மாா்புப் பகுதியில் பாதிப்பு இருப்பதாகக் கூறினாா்.

மேலும், மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. விபத்துக்கு வழிவகுத்த சரியான சூழ்நிலைகள் இன்னும் நிறுவப்படவில்லை. இது தொடா்பான பிசிஆா் அழைப்பு சம்பவம் குறித்து புகாரளித்த பின்னா் உள்ளூா் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இதையடுத்து, தேவையான நடவடிக்கை தொடங்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் சாலையின் தவறான பக்கத்தில் இயக்கப்பட்டதா என்பதை போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து தொடா்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com