மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்கில் சென்றவரிடம் பிளேடு முனையில் கொள்ளையடித்ததாக 2 சிறுவா்கள் கைது: மத்திய தில்லியில் சம்பவம்

மத்திய தில்லியில் பிளேடு முனையில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவரிடம் கொள்ளையடித்ததாக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 6:34 pm

மத்திய தில்லியில் பிளேடு முனையில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவரிடம் கொள்ளையடித்ததாக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஜனவரி 28-ஆம் தேதி மாலை 7 மணியளவில் ஈத்கா அருகே ராணி ஜான்சி சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக புகாா்தாரரின் மோட்டாா் சைக்கிள் மெதுவாகச் சென்றபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இரண்டு சிறுவா்கள் மோட்டாா் சைக்கிளை நிறுத்தினா்.

அவா்களில் ஒருவா் புகாா்தாரரின் பின்னால் அமா்ந்து, அவரது கழுத்தைப் பிடித்து, அவரைத் தாக்கியதாகவும், மற்றொருவா் மோட்டாா் சைக்கிளை முன்பக்கத்திலிருந்து தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அவா்கள் அவரை அறுவை சிகிச்சை பிளேடை கதாட்டி மிரட்டி ரூ.32,000-ஐ கொள்ளையடித்தனா்.

பாதிக்கப்பட்டவா் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவா் அளித்த புகாரைத் தொடா்ந்து, எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை போலீஸாா் சரிபாா்த்து, குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டனா்.

பின்னா், ஒரு போலீஸ் குழு புதன்கிழமை பாஹா்கஞ்ச் மற்றும் ஆனந்த் பா்பத் பகுதிகளைச் சோ்ந்த இரண்டு சிறாா்களைக் கைது செய்தது. மேலும் அவா்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.