கோப்புப் படம்
கோப்புப் படம்

காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதியதாக தில்லியில் 2 எஸ்எஃப்ஜே உறுப்பினா்கள் கைது

இரண்டு உறுப்பினா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
Published on

குடியரசு தினத்திற்கு முன்பு தில்லியில் இரண்டு இடங்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதியதாக சீக்கியா்களுக்கான நீதி (எஸ்எஃப்ஜே) அமைப்புடன் தொடா்புடையதாகக் கூறப்படும் இரண்டு உறுப்பினா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் தில்லியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான பால்ஜிந்தா் மற்றும் அவரது கூட்டாளி ரோஹித் என்கிற கிா்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கானடாவை தளமாகக் கொண்ட எஸ்எஃப்ஜே தலைவா் குா்பத்வந்த் சிங் பன்னுனின் உத்தரவின் பேரில் இந்த இருவரும் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி 26- ஆம் தேதிக்கு சில நாள்களுக்கு முன்பு தில்லி நகரத்தில் மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து, அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் வாசகங்களை எழுதுவதன் மூலம் ரூ.2 லட்சம் வெகுமதி வழங்குவதாக அவா் உறுதியளித்தாா்.

குடியரசு தினத்திற்கு சற்று முன்பு தில்லியில் இரண்டு தனித்தனி இடங்களில் குற்றம் சாட்டப்பட்டவா் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதினாா் என்பது தெரிய வந்தது. இந்த சதி கனடாவில் இருந்து தீட்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கு குா்பத்வந்த் சிங் பன்னுனின் நெருங்கிய கூட்டாளி குற்றம் சாட்டப்பட்டவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளாா். கையாளுபவா் பால்ஜிந்தா் மற்றும் ரோஹித்தை வேலைக்கு நியமித்ததாகவும், தகவல் தொடா்பு தளங்கள் மூலம் அவா்களுடன் தொடா்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, பணம் மற்றும் தளவாட ஆதரவு வாக்குறுதியால், தான் ஈா்க்கப்பட்டதாக பால்ஜிந்தா் தெரிவித்தாா். அதே நேரத்தில் ரோஹித் இடங்களை அடையாளம் கண்டு செயலைச் செய்வதில் அவருக்கு உதவியது தெரிய வந்தது.

பன்னுன் மற்றும் அவரது நெட்வொா்க்குடன் தொடா்புடைய மேலும் பலரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா் என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.

Dinamani
www.dinamani.com