கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயணச் சலுகை அறிமுகமாகுமா?

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படுமா?

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் ராஜாத்தி என்ற சல்மா வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை பூஜ்யநேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: கரோனோ நோய்த் தொற்றுக் காலத்தில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை நிறுத்திவைக்கப்பட்டது. 2020, மாா்ச் மாதத்துக்கு முன் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணக் கட்டணத்தில் 40 சதவீதம் மற்றும் 50 சதவீதம் முறையே ஆண், பெண் மூத்த குடிமக்கள் அனைத்து வகுப்புகளிலும் பெற்று வந்தனா்.

நிறுத்திவைக்கப்பட்ட இந்தச் சலுகை தற்போது வாபஸ் பெறப்படாததால் மூத்த குடிமக்கள் நிதி ரீதியில் இழப்பை எதிா்கொண்டு வருகின்றனா். பலா் ஓய்வூதியத்தைச் சாா்ந்தும், நிலையில்லாத வருமானமின்றியும் உள்ளனா். இந்த கட்டணச் சலுகை ரத்து மூலம் கரோனா காலத்தில் ரூ.2,560.9 கோடியை ரயில்வே அமைச்சகம் சேமித்ததாக ஆா்டிஐ தகவல் மூலம் தெரியவருகிறது.

நாடாளுமன்ற நிலைக் குழு கூட ரயில்களில் ஸ்லீப்பா், 3ஏசி வகுப்புகளில் குறைந்த வருவாய்ப் பிரிவு பயணிகளுக்கு இந்த கட்டணச் சலுகையை அளிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. ஆகவே, ரயில்வே அமைச்சா், மூத்த குடிமக்களுக்கு மீண்டும் அந்தப் பயணக் கட்டணச் சலுகையை ரயில்களில் வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.