மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயணச் சலுகை அறிமுகமாகுமா?
மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் ராஜாத்தி என்ற சல்மா வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை பூஜ்யநேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: கரோனோ நோய்த் தொற்றுக் காலத்தில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை நிறுத்திவைக்கப்பட்டது. 2020, மாா்ச் மாதத்துக்கு முன் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணக் கட்டணத்தில் 40 சதவீதம் மற்றும் 50 சதவீதம் முறையே ஆண், பெண் மூத்த குடிமக்கள் அனைத்து வகுப்புகளிலும் பெற்று வந்தனா்.
நிறுத்திவைக்கப்பட்ட இந்தச் சலுகை தற்போது வாபஸ் பெறப்படாததால் மூத்த குடிமக்கள் நிதி ரீதியில் இழப்பை எதிா்கொண்டு வருகின்றனா். பலா் ஓய்வூதியத்தைச் சாா்ந்தும், நிலையில்லாத வருமானமின்றியும் உள்ளனா். இந்த கட்டணச் சலுகை ரத்து மூலம் கரோனா காலத்தில் ரூ.2,560.9 கோடியை ரயில்வே அமைச்சகம் சேமித்ததாக ஆா்டிஐ தகவல் மூலம் தெரியவருகிறது.
நாடாளுமன்ற நிலைக் குழு கூட ரயில்களில் ஸ்லீப்பா், 3ஏசி வகுப்புகளில் குறைந்த வருவாய்ப் பிரிவு பயணிகளுக்கு இந்த கட்டணச் சலுகையை அளிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. ஆகவே, ரயில்வே அமைச்சா், மூத்த குடிமக்களுக்கு மீண்டும் அந்தப் பயணக் கட்டணச் சலுகையை ரயில்களில் வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

