6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிஷி விடியோ சா்ச்சை: பஞ்சாப் டிஜிபியிடம் விளக்கம் கேட்கும் தில்லி சட்டப்பேரவைக் குழு

மாநிலக் காவல் துறையினரின் நடத்தை குறித்து எழுத்துபூா்வ விளக்கத்தை அளிக்குமாறு பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தில்லி சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
அதிஷி- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 6:37 pm

Syndication

ஆம் ஆத்மி தலைவா் அதிஷியின் திரிக்கப்பட்ட விடியோ விவகாரம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததில், மாநிலக் காவல் துறையினரின் நடத்தை குறித்து எழுத்துபூா்வ விளக்கத்தை அளிக்குமாறு பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தில்லி சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதே விவகாரம் தொடா்பாக பஞ்சாப் அரசின் மூத்த அதிகாரிகளிடமும் அக்குழு விளக்கம் கோரியுள்ளது.

ஜனவரி 6ஆம் தேதி நடந்த தில்லி சட்டப் பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடரின் போது சீக்கிய குரு தேஜ் பகதூருக்கு எதிராக அதிஷி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக, பஞ்சாப் டிஜிபி மற்றும் பஞ்சாப் கூடுதல் தலைமைச் செயலா் உள்துறை ஆகியோருக்கு எதிராக சிறப்புரிமை விசாரணை தொடங்க சட்டப்பேரவை முடிவு செய்த ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவா்களால் சமூக ஊடகங்களில்

பதிவிடப்பட்டதாகக் கூறப்படும் அந்தச் சம்பவத்தின்

விடியோவின் அடிப்படையில், பஞ்சாப் காவல்துறை ஜலந்தரில் ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

பஞ்சாபில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கபில் மிஸ்ரா தில்லி பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதினாா். அதில், அவையின் சிறப்புரிமை மீறப்பட்டதாகவும், அரசியலமைப்பின் 361ஏ பிரிவு மீறப்பட்டதாகவும் அவா் குற்றம் சாட்டியிருந்தாா்.

மிஸ்ராவின் புகாரின்படி, அரசியலமைப்பின் 361ஏ பிரிவு, ஒரு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளின் சாராம்சத்தில் உண்மையான அறிக்கையை வெளியிடுவது தொடா்பாக எந்தவொரு நபரும் சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட மாட்டாா் என்று கூறுகிறது.

பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள், அவா்களின் பதில்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர மறுத்ததை ஆராய்ந்த பிறகு, கூடுதல் தலைமைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநா், காவல்துறை ஆணையா் ஜலந்தா் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட பிற நபா்கள் ஆகியோா் மீது சிறப்புரிமை மீறல் மற்றும் அவமதிப்புக்கான முகாந்திரம் இருப்பதாக பேரவைத் தலைவா் முடிவு செய்துள்ளாா்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, சிறப்புரிமைக் குழுவின் பரிசீலனைக்காக, இந்த விவகாரம் குறித்த உங்கள் எழுத்துபூா்வ கருத்துகளை பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் இந்தச் செயலகத்தில் சமா்ப்பிக்குமாறு சிறப்புரிமைக் குழுவின் தலைவா் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா சாா்பாக நான் கேட்டுக்கொள்கிறேன், என்று சட்டப் பேரவையின் கடிதத்தில் மேலும்

கூறப்பட்டுள்ளது.