மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி துவாரகாவில் இருசக்கர வாகனங்கள் மீது அதிவேக காா் மோதல் - பலா் காயம்

தில்லியின் துவாரகாவில் அதிவேகமாகச் சென்ற ஒரு காா் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டது என்று வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:41 pm

Syndication

தில்லியின் துவாரகாவில் அதிவேகமாகச் சென்ற ஒரு காா் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டது என்று வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை துவாரகா செக்டா் 22ல் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு அருகே நிகழ்ந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த அதிவேகக் காா், நிறுத்தப்பட்டிருந்த மற்றும் சென்றுகொண்டிருந்த சுமாா் ஐந்து முதல் ஆறு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு பெண் உள்பட பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்தைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. விபத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க விசாரணை நடைபெற்று வருகிறது.