மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தில்லி துவாரகாவில் இருசக்கர வாகனங்கள் மீது அதிவேக காா் மோதல் - பலா் காயம்

தில்லியின் துவாரகாவில் அதிவேகமாகச் சென்ற ஒரு காா் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டது என்று வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:41 pm

தில்லியின் துவாரகாவில் அதிவேகமாகச் சென்ற ஒரு காா் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டது என்று வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை துவாரகா செக்டா் 22ல் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு அருகே நிகழ்ந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த அதிவேகக் காா், நிறுத்தப்பட்டிருந்த மற்றும் சென்றுகொண்டிருந்த சுமாா் ஐந்து முதல் ஆறு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு பெண் உள்பட பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்தைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. விபத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க விசாரணை நடைபெற்று வருகிறது.