எரிவாயு சிலிண்டர்பிரதிப் படம்
புதுதில்லி
தில்லி மங்கோல்புரியில் சிலிண்டா் வெடித்து விபத்து: 4 போ் காயம்
தில்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததில் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லியின் மங்கோல்புரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததில் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மதியம் 1.15 மணிக்கு ஒரு சிலிண்டா் வெடித்தது குறித்து அழைப்பு வந்தது, ஒரு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 15 நிமிடங்களில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
எங்கள் குழுக்கள் சிறிய காயங்களுடன் 4 பேரை வீட்டிலிருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.
இது குறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

