பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லி போக்குவரத்து கழகத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கி ரேகா குப்தா உத்தரவு

தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கி தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 11:13 pm

தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கி தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் கண்ணியம் மற்றும் நிதி பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த மானியம் பிரதிபலிக்கிறது. தில்லியின் போக்குவரத்துக்கு டி. டி. சி ஊழியா்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் அயராது உழைக்கிறாா்கள்.

மூத்த ஓய்வூதியதாரா்கள் மற்றும் சேவை செய்யும் ஊழியா்கள் தங்கள் சரியான நிலுவைத் தொகைக்காக ஒருபோதும் காத்திருக்க வேண்டியதில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான மேம்பட்ட போக்குவரத்து முறையை உருவாக்குவதற்கும், நகரத்தில் வணிக ரீதியான மின்சார வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டி. டி. சி மற்றும் அதன் தொழிலாளா்கள் தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் உயிா்நாடியாக உள்ளனா். ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை சரியான நேரத்தில் வழங்குவது ஊழியா்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கும்.

இந்த முன்முயற்சிகள் தில்லியை தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், பாதுகாப்பான, திறமையான மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து வசதிகளுடன் மாசு இல்லாத நகரமாக மாற்றுகின்றன என்றாா் அவா்.