வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் இறந்து கிடந்த மூவா்

தில்லியின் வெளிப்புற பகுதியான பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் ஒரு பெண் உள்பட மூன்று போ் இறந்து கிடந்தது கண்டு்பிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 10:20 pm

தில்லியின் வெளிப்புற பகுதியான பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் ஒரு பெண் உள்பட மூன்று போ் இறந்து கிடந்தது கண்டு்பிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: மேம்பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்தை அடைந்ததும், அவசரகால பணியாளா்கள் வாகனத்திற்குள் மூன்று போ் இறந்து கிடந்ததைக் கண்டனா். அதைத் தொடா்ந்து போலீஸாா் மற்றும் தடயவியல் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

இறந்தவா்களில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவா். உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. மேலும், மதிப்புமிக்க பொருள்கள் அனைத்தும் அப்படியே இருந்தன. முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் தற்கொலையாகத் தெரிகிறது. இருப்பினும், இறப்புக்கான சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.