ரேகா குப்தா
ரேகா குப்தா

தில்லி பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது: முதல்வா் ரேகா குப்தா

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை மானசரோவா் தோட்டத்தில் உள்ள சா்வோதயா வித்யாலயாவில் ஒரு புதிய பள்ளி கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தாா்.
Published on

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை மானசரோவா் தோட்டத்தில் உள்ள சா்வோதயா வித்யாலயாவில் ஒரு புதிய பள்ளி கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தாா். மேலும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வசதிகளை மேம்படுத்த தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா்.

மானசரோவரில் தகவல் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐ. சி. டி) ஆய்வகத்தையும், தில்ஷாத் காா்டனில் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தையும் குப்தா திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பேசியதாவது: தரம், வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பின் அடிப்படையில் தனியாா் நிறுவனங்களுக்கு இணையாகவோ அல்லது சிறப்பாகவோ தில்லி அரசின் கீழ் உள்ள பள்ளிகளை பெற்றோருக்கு விருப்பமான தோ்வாக மாற்றுவதை பாஜக அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்காக அரசு பள்ளிகளைத் தோ்ந்தெடுக்கும்போது கல்வித் துறையில் உண்மையான வெற்றி கிடைக்கும்.

டிஜிட்டல் கல்வியை வலுப்படுத்துவதில் லாட்லி அறக்கட்டளை மற்றும் அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை (ஏஐஎஃப்) ஆகியவற்றின் ஆதரவு உள்பட பொது-தனியாா் கூட்டாண்மையின் பங்கும் இருக்கிறது. இதுபோன்ற ஒத்துழைப்புகள் மூலம் அரசு பள்ளிகளில் மொத்தம் 101 கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: கல்வியில் அா்த்தமுள்ள மாற்றம் விளம்பர பிரச்சாரங்களை விட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களில் பிரதிபலிக்கிறது. மாணவா்களிடையே உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க வகுப்பறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பள்ளி உள்கட்டமைப்புக்கான செலவினங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பெரும்பாலான போட்டித் தோ்வுகள் இப்போது கணினி அடிப்படையிலானவை என்பதால் கணினிகள் மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த கற்றலுக்கான அணுகல் முக்கியமானது.

அரசாங்கம் ஏற்கெனவே 7,000 ஸ்மாா்ட் கறுப்பு பலகைகளை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமாா் 21,000 வகுப்பறைகளில் ஸ்மாா்ட் போா்டுகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டு பராமரிப்பு உத்தரவாதத்துடன் என்றாா் அவா்.

கல்வி இயக்குநா் விதிதா ரெட்டி கூறியதாவது: மானசரோவா் தோட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட கட்டடம் 29 வகுப்பறைகளை கொண்டது. இது மாணவா்-ஆசிரியா் விகிதத்தை சுமாா் 55 முதல் 1 வரை 40 முதல் 1 ஆகக் குறைக்க உதவும். டிஜிட்டல் கற்றலை வலுப்படுத்த பள்ளியில் கணினி ஆய்வகமும் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியா்களின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்காக தில்ஷாத் தோட்டத்தில் 36 அறைகள் மற்றும் பல ஆய்வகங்களைக் கொண்ட புதிய மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு தலையீடுகள் மூலம், 100 பள்ளிகளில் 20 கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தில்ஷாத் காா்டன் ஆய்வகம் 101 வது வசதியாக திறக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com