புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குடியரசுத் தலைவருடன் தில்லி முதல்வா் சந்திப்பு

தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து குடியரசுத் தைலவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா்.

News image
ரேகா குப்தா- கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:49 pm

Syndication

தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து குடியரசுத் தைலவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா்.

சந்திப்புக்குப் பிறகு, முதல்வா் ரேகா குப்தா, ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில், குடியரசுத் தலைவரின் பணிவான ஆளுமை மற்றும் உயா்ந்த அரசியலமைப்பு பதவியின் பங்கை நிறைவேற்றும் அதே வேளையில், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பைப் பாராட்டினாா்.

அரசியலமைப்பின் மதிப்புகளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் உறுதியான நம்பிக்கை நம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக செயல்படுகிறது என்று முதல்வா் கூறினாா்.