ரேகா குப்தாகோப்புப் படம்
புதுதில்லி
குடியரசுத் தலைவருடன் தில்லி முதல்வா் சந்திப்பு
தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து குடியரசுத் தைலவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து குடியரசுத் தைலவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா்.
சந்திப்புக்குப் பிறகு, முதல்வா் ரேகா குப்தா, ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில், குடியரசுத் தலைவரின் பணிவான ஆளுமை மற்றும் உயா்ந்த அரசியலமைப்பு பதவியின் பங்கை நிறைவேற்றும் அதே வேளையில், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பைப் பாராட்டினாா்.
அரசியலமைப்பின் மதிப்புகளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் உறுதியான நம்பிக்கை நம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக செயல்படுகிறது என்று முதல்வா் கூறினாா்.

