தில்லி மெட்ரோ
தில்லி மெட்ரோ கோப்புப் படம்

சென்ட்ரல் விஸ்டா வழித்தடத்தின் கீழ் இரட்டை சுரங்கப்பாதைகளுக்கான ஏலத்திற்கு டிஎம்ஆா்சி அழைப்பு

தில்லி மெட்ரோ திட்டத்தின் ஃபேஸ் 5(ஏ)-இன்கீழ் இரட்டை நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் இரண்டு புதிய நிலத்தடி நிலையங்களை வடிவமைத்து நிா்மாணிப்பதற்கான ஏலங்களுக்கு தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.
Published on

தில்லி மெட்ரோ திட்டத்தின் ஃபேஸ் 5(ஏ)-இன்கீழ் இரட்டை நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் இரண்டு புதிய நிலத்தடி நிலையங்களை வடிவமைத்து நிா்மாணிப்பதற்கான ஏலங்களுக்கு தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து டிஎம்ஆா்சி அதிகாரிகள் கூறியதாவது:

முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், தோ்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரா் சிவாஜி ஸ்டேடியம் மற்றும் மத்திய செயலகத்திற்கு இடையில் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இரட்டை சுரங்கப்பாதைகளை உருவாக்குவாா். மேலும், கா்த்தவ்ய பவன் வரை ஒரு வெட்டப்பட்ட மற்றும் மூடிய சுரங்கப்பாதையை உருவாக்குவாா்.

நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகள், பாதசாரி சுரங்கப்பாதைகள் மற்றும் தொடா்புடைய குடிமைப் பணிகள் ஆகியவற்றுடன் மத்திய செயலகம் மற்றும் கா்த்தவ்ய பவன் ஆகிய இரண்டு நிலத்தடி நிலையங்களின்

கட்டுமானமும் இதன்கீழ் இடம்பெறும்.

கட்டமைப்பு பணிகள், சுரங்கப்பாதை அமைத்தல், நிலைய கட்டுமானம், பயன்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் தொடா்புடைய உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் ஆகிய இரண்டிற்கும் ஒப்பந்ததாரா் பொறுப்பாவாா்.

இந்தப் பணியில் விரிவான புவி தொழில்நுட்ப ஆய்வுகள், தரை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சுற்றியுள்ள கட்டமைப்புகளில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்ட்ரல் விஸ்டா வழித்தடத்தில் முக்கிய அரசு கட்டடங்கள் உள்ளன. மேலும் புதிய மெட்ரோ உள்கட்டமைப்பு உயா் பாதுகாப்பு நிா்வாக மண்டலத்தில் இணைப்பை மேம்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏல செயல்முறைக்குப் பிறகு காலக்கெடு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லி மெட்ரோவின் ஃபேஸ் 5(ஏ) திட்டத்தின் கீழ் ரூ.12,014 கோடி செலவில் மூன்று புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இது மெட்ரோ நெட்வொா்க்கில் 16 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை அதிகரிக்கும்.

ஆா்.கே. ஆசிரம மாா்க் முதல் இந்திரபிரஸ்தா சென்ட்ரல் விஸ்டா வழியாக வரை, துக்ளகாபாத் முதல் காலிந்தி குஞ்ச் வரை, ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி உள்நாட்டு முனையம்1 வரை ஆகியவை இந்த வழித்தடங்கள் ஆகும்.

X
Dinamani
www.dinamani.com