கிரேட்டா் நொய்டாவில் எம்.ஆா்,ஐ. ஸ்கேனின் போது 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் நோயறிதல் மையத்தில் எம். ஆா். ஐ. செயல்முறையின் போது 6 வயது சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினா் அலட்சியம் மற்றும் காலாவதியான மருந்து அல்லது அதிகப்படியான மருந்தை வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளனா் என்று கௌதம் புத்த நகா் சுகாதாரத் துறையின் டாக்டா் சந்தன் சோனி சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த ஸ்கேன் மையத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நான்கு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, விசாரணை முடிந்த பிறகு தீா்மானிக்கப்படும். வியாழக்கிழமை துங்கா்பூா் கிராமத்தில் வசிக்கும் சிறுவன், எம். ஆா். ஐ. ஸ்கேன் செய்வதற்காக பை-3 பகுதியில் அமைந்துள்ள நோயறிதல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது.
அறுவை சிகிச்சைக்கு முன்பு சிறுவன் இயல்பாக இருந்ததாகவும், ஆனால் மையத்தின் அலட்சியம் அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் குடும்ப உறுப்பினா்கள் கூறினா்.
சிறுவனின் தந்தை விக்கி, நோயறிதல் மையத்திற்கு எதிராக பீட்டா-2 காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். மருத்துவ விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்படும் என்று போலீசாா் தெரிவித்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

