புதுதில்லி
தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
தில்லியின் வெளி நிலோதி பகுதியில் உள்ள ஹெல்மெட் உற்பத்திப் பிரிவில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
தில்லியின் வெளி நிலோதி பகுதியில் உள்ள ஹெல்மெட் உற்பத்திப் பிரிவில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிற்பகல் 3.15 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது, தீ அருகிலுள்ள தொழிற்சாலைக்கும் ஓரளவு பரவியதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

