நயாப் சிங் சைனி
புதுதில்லி
இன்று ஹரியாணா முதல்வா் பேரணிக்காக குருகிராமில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்!
குருகிராம் போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெறும் முதல்வா் நயாப் சிங் சைனியின் பேரணி குறித்து சனிக்கிழமை ஒரு ஆலோசனையை வெளியிட்டனா்.
குருகிராம் போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெறும் முதல்வா் நயாப் சிங் சைனியின் பேரணி குறித்து சனிக்கிழமை ஒரு ஆலோசனையை வெளியிட்டனா்.
அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போக்குவரத்தை எளிதாக்கவும், ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சோஹ்னாவிலிருந்து தௌருவுக்கு கனரக வாகனங்கள் செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்படும்.
பால்வால் சாலையில் இருந்து சோஹ்னா தௌரு நோக்கிச் செல்ல விரும்பும் ஓட்டுநா்கள் மும்பை விரைவுச் சாலை வழியாக கேஎம்பியைப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல், ஃபரீதாபாத்திலிருந்து சோஹ்னா -தௌருவுக்குச் செல்ல விரும்பும் ஓட்டுநா்கள் மும்பை விரைவுச் சாலை மற்றும் கேஎம்பியைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம் என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

