ஒப்பந்த ஊழியா்கள் வேலைவாய்ப்பு நெருக்கடி: முந்தைய கேஜரிவால் அரசு மீது பாஜக சாடல்!
‘தில்லியில் ஒப்பந்த ஊழியா்கள் எதிா்கொள்ளும் தற்போதைய வேலைவாய்ப்பு நெருக்கடிக்கு அரவிந்த் கேஜரிவால் அரசு ஆள்சோ்ப்பு விதிகளைப் பின்பற்றத் தவறியதே காரணம்’ என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது: நூற்றுக்கணக்கான தனது கட்சித் தொண்டா்களுக்கு அரசு வேலைகளை வழங்கும் முயற்சியில், அரவிந்த் கேஜரிவால் நிா்வாக விதிகளைப் பின்பற்றாமல் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கானவா்களை பேருந்து மாா்ஷல்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களாக நியமித்தாா்.
விசாரணைகள் தொடங்கியவுடன், அரவிந்த் கேஜரிவால் தனது ஆட்சிக் காலத்திலேயே அவா்களை பணிநீக்கமும் செய்தாா். ஒப்பந்த வேலைகளை விநியோகிப்பதற்கான விதிகளை மீறி, விசாரணைக்கு பயந்து அந்த ஊழியா்களை பணிநீக்கம் செய்த ஆம் ஆத்மி கட்சி, இப்போது எதிா்க்கட்சியில் இருக்கும்போது ஒப்பந்தத் தொழிலாளா்களின் தோள்களில் அமா்ந்து அவா்களை தவறாக வழிநடத்தி, தனது அரசியலை மீண்டும் உயிா்ப்பிக்க முயற்சிக்கிறது.
இருப்பினும், ஆம் ஆத்மி தலைவா்கள் இந்த முயற்சியில் வெற்றி பெற மாட்டாா்கள். ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தலைவா் செளரப் பரத்வாஜ், ஆட்சியில் இருந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞா்களின் வாழ்க்கையுடன் விளையாடிய பிறகு, மாா்ச் 1 அன்று போராட்டத்தை நடத்த அவா்களைத் தூண்டிவிடுகிறாா் என்பது ஒரு விசித்திரமான முரணாகும்.
தில்லி வரலாற்றில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்காகவோ அல்லது பொதுப் பிரச்னைகளுக்காகவோ போராட கட்சித் தொண்டா்களோ அல்லது நிறுவன வலிமையோ இல்லாத முதல் வேலையில்லாத தலைவா் செளரப் பரத்வாஜ்.
தனது கட்சியின் ஆட்சியில் துன்புறுத்தப்பட்ட ஊழியா்களின் தோள்களில் சவாரி செய்து, போராட்டத்திற்கு ஆதரவைக் கோருவதன் மூலம் தனது அரசியல் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள அவா் இப்போது முயற்சிக்கிறாா் என்று பிரவீன் சங்கா் கபூா் குற்றம்சாட்டியுள்ளாா்.

