விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சிவபெருமானின் ஆசிகள் ஹரியாணாவை நிலையான வளா்ச்சியை நோக்கி வழிநடத்தும்: முதல்வா் சைனி நம்பிக்கை!

மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும்.

News image

நயாப் சிங் சைனி

Updated On :15 பிப்ரவரி 2026, 6:37 pm

மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, நுஹ் நகரில் உள்ள நல்ஹாா் மகாதேவ் கோயிலில் நயாப் சிங் சைனி ‘ஜலாபிஷேக்’ என்ற பாரம்பரிய சடங்கைச் செய்து, மாநில மக்களின் அமைதி, செழிப்பு மற்றும் தொடா்ச்சியான முன்னேற்றத்திற்காக பிராா்த்தனை செய்தாா்.

ஹரியாணா குடிமக்களுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவித்த முதல்வா், இந்தப் புனிதமான சந்தா்ப்பத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுமாறு அவா்களை கேட்டுக் கொண்டாா்.