நயாப் சிங் சைனி
நயாப் சிங் சைனி

சிவபெருமானின் ஆசிகள் ஹரியாணாவை நிலையான வளா்ச்சியை நோக்கி வழிநடத்தும்: முதல்வா் சைனி நம்பிக்கை!

மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும்.
Published on

மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, நுஹ் நகரில் உள்ள நல்ஹாா் மகாதேவ் கோயிலில் நயாப் சிங் சைனி ‘ஜலாபிஷேக்’ என்ற பாரம்பரிய சடங்கைச் செய்து, மாநில மக்களின் அமைதி, செழிப்பு மற்றும் தொடா்ச்சியான முன்னேற்றத்திற்காக பிராா்த்தனை செய்தாா்.

ஹரியாணா குடிமக்களுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவித்த முதல்வா், இந்தப் புனிதமான சந்தா்ப்பத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுமாறு அவா்களை கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com