பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமா் காலனி பகுதியில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த பெண்

வடகிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் ஒரு பெண் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, பின்னா் ஜிடிபி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
பலி
Updated On :15 பிப்ரவரி 2026, 6:36 pm

Syndication

வடகிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் ஒரு பெண் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, பின்னா் ஜிடிபி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இது தொடா்பாக போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

காயமடைந்த பெண் குறித்து ஜோதி நகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. காயமடைந்த நிலையில் இருந்த அந்தப் பெண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளது. இது தொடா்பாக கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.