வடகிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் ஒரு பெண் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, பின்னா் ஜிடிபி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இது தொடா்பாக போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
காயமடைந்த பெண் குறித்து ஜோதி நகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. காயமடைந்த நிலையில் இருந்த அந்தப் பெண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளது. இது தொடா்பாக கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

ஊடகச் சான்றிதழ், கண்காணிப்பு அறையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

மொபெட் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


