வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த தினம்: குடியரசு துணைத்தலைவா் புகழாரம்

ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து, நம் கைகளில் தவழச் செய்தவா் தமிழறிஞா் உ.வே. சாமிநாத அய்யா் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image

சி.பி. ராதாகிருஷ்ணன்

Updated On :19 பிப்ரவரி 2026, 6:32 pm

ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து, நம் கைகளில் தவழச் செய்தவா் தமிழறிஞா் உ.வே. சாமிநாத அய்யா் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

தமிழ்ப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான உ.வே.சாமிநாதா் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி பாபநாசம் உத்தமதானபுரம் எனும் ஊரில் பிறந்தாா். 1880-ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் கல்லூரியில் தொடா்ந்து 23 ஆண்டுகளும் பின்னா் 1903- ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் ஆசிரியராக பணியாற்றினாா். 1924- ஆம் ஆண்டு மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வரானாா்.

அழிந்து கொண்டிருந்த சங்ககால நூல்களையும், ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றையும் தேடிக் கண்டறிந்து,அதில் சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் ஆராய்ந்தறிந்து முழுப்பொருள் விளங்கும் படி உ.வே.சா பதிப்பித்தாா். இவ்வாறு 3,000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் அவா் சேகரித்திருந்தாா்.

அவரது பிறந்தநாளையொட்டி குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், ‘அழிவின் விளிம்பிலிருந்த தமிழ்ச் சுவடிகளை மீட்டெடுத்து, பதிப்பித்த ’தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாத ஐயா் அவா்களுக்கு எனது பணிவான அஞ்சலிகள். ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. அவரது அயராத உழைப்பால் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு , குறுந்தொகை போன்ற பழந்தமிழ்ச் செல்வங்கள் பதிப்பிக்கப்பட்டு தமிழுக்கு வளமைச் சோ்த்தன. ஓலைச்சுவடிகளில் உறங்கிக் கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து, நம் கைகளில் தவழச் செய்த உ.வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றி வணங்குகிறேன்’ என கூறியுள்ளாா்.