உத்தர பிரதேசத்தின் கௌதம் புத் நகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அவை பின்னா் வெறும் புரளி என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல்துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் வந்தன. அதைத் தொடா்ந்து பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தன.
கௌதம் புத் நகா் காவல்துறை உடனடியாக பதிலளித்து, வெடிகுண்டு செயலிழப்புப் படை, நாசவேலை தடுப்பு சோதனைக் குழு மற்றும் மோப்ப நாய் படை மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் சோதனை செய்வதை உறுதி செய்தது.
பள்ளிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மின்னஞ்சலின் மூலத்தைப் பற்றிய தொழில்நுட்ப விசாரணையை சைபா் குழு மிகுந்த தீவிரத்துடன் மேற்கொண்டு வருகிறது.
நிலைமை முற்றிலும் இயல்பானது. சம்பவ இடத்தில் அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது. வதந்திகள் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று காவல் துறை அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடையது

நொய்டா வன்முறை: 300 போ் கைது, 7 வழக்குகள் பதிவு - கெளதம் புத் நகா் காவல் ஆணையா் பேட்டி

1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது

அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்

ராஜஸ்தானின் பல்வேறு அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


