பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தில்லி காவல் துறையின் ‘ரீகனெக்ட்’ திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்புள்ள திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

தில்லி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, ரூ.1.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள 580 திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கைப்பேசிகள்

News image

மாதிரிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 6:14 pm

தில்லி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, ரூ.1.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள 580 திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கைப்பேசிகளை, புதன்கிழமை ‘ரீகனெக்ட்‘ என்ற திட்டத்தின் கீழ், அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: 79-ஆவது தில்லி காவல்துறை வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்டவற்றில் மெட்ரோ பிரிவு கண்டறிந்த 266 கைப்பேசிகள் ரயில்வே பிரிவு கண்டறிந்த 188 கைப்பேசிகள், ஐஜிஐ விமான நிலையப் பிரிவு கண்டறிந்த 126 கைப்பேசிகள் அடங்கும்.

கஷ்மீரி கேட்டில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு சுமாா் 155 பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் மீட்கப்பட்ட கைப்பேசிகளைப் பெற வந்திருந்தனா்.

காவல் இணை ஆணையா் (போக்குவரத்து) மிலிந்த் மகாதியோ டம்பேரே, காவல் துணை ஆணையா் (மெட்ரோ) குஷால் பால் சிங் மற்றும் காவல் துணை ஆணையா் (ஐஜிஐ) விசித்ரா வீா் முன்னிலையில் உரிமையாளா்களிடம் கைப்பேசிகள் ஒப்படைப்பு நடத்தப்பட்டது.

மத்திய உபகரண அடையாளப் பதிவு (சிஇஐஆா்) போா்ட்டலைப் பயன்படுத்தி பல்வேறு நெட்வொா்க்குகளில் திருடப்பட்ட சாதனங்களைக் கண்டறிந்து, கள நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக மெட்ரோ நிலையங்கள், ரயில்கள் மற்றும் விமான நிலைய முனையங்கள் போன்ற அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், கைப்பேசிகள் திருட்டுக்கு எதிராக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.