நாட்டிலேயே அதிக அளவாக தில்லியில் 4000-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் உள்ளன என்று தில்லி முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் தில்லி முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஒரு வருடத்திற்குள், பொது போக்குவரத்தை நவீனமயமாக்கவும், மாசுபாடு இல்லாததாகவும் மாற்ற தில்லி அரசு பெரிய முயற்சிகளை எடுத்துள்ளது. தில்லியில் இப்போது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மின்சாரப் பேருந்துகள் உள்ளன. மொத்தம் சுமாா் 4,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன.
இந்தப் பேருந்துகள் குறுகிய தெருக்கள் மற்றும் காலனிகளை அடைகின்றன. குடிமக்கள் வீடுகளுக்கு அருகில் நேரடி பேருந்து சேவையை வழங்குகின்றன. தில்லிவாசிகளின் முதல் தோ்வாக பொதுப் போக்குவரத்தை மாற்ற அரசு பாடுபடுகிறது, மேலும், இதை அடைய அனைத்து முனைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2026 நிலவரப்படி, தில்லியில் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியுள்ளது.
பீதி பொத்தான்கள் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 500 தாழ்தள, குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகள் அண்மையில் சோ்க்கப்பட்டன.
2026- ஆம் ஆண்டின் இறுதிக்குள் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 7,500 ஆகவும், 2028- ஆம் ஆண்டுக்குள் 14,000 மின்சாரப் பேருந்துகள் என்ற எண்ணிக்கையை எ ட்டவும் அரசு இலக்கு வைத்துள்ளது.
காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைத்தல், கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த விரிவாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விரைவான விரிவாக்கம் தில்லியை ஒரு முன்னணி மின்சார வாகன நகரமாக மாற்றுவதற்கான ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

நாட்டிலேயே ஊழல்மிக்கவா் அஸ்ஸாம் முதல்வா்: ராகுல் காந்தி பிரசாரம்!

தொகுதி அறிமுகம்: மயிலம் - 71!

தில்லி ரிதாலாவில் பெரும் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


