மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாா்ச் 31-இல் காலாவதியாகும் கலால் வரி கொள்கையை தில்லி அரசு நீட்டிக்க வாய்ப்பு!

தில்லி அரசு 2026-27 நிதியாண்டிற்கான கலால் வரி கொள்கையை நீட்டிக்க வாய்ப்புள்ளது.

News image

சித்திரிப்பு - ENS

Updated On :21 பிப்ரவரி 2026, 6:59 pm

தில்லி அரசு 2026-27 நிதியாண்டிற்கான கலால் வரி கொள்கையை நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அது இன்னும் ஒரு புதிய கொள்கையில் செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், தில்லி அரசு 2022-23 உரிம ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வரி அடிப்படையிலான கலால் கொள்கையை 2025-26 நிதியாண்டிற்கு நீட்டித்தது. இது ஜூலை 1, 2025 முதல் மாா்ச் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

‘இப்போது, தற்போதைய கொள்கையை மேலும் நீட்டிக்க கலால் துறையால் அரசுக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது’என்று அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு நீட்டிப்பு வரலாம்.

சில்லறை மதுபான விற்பனையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சீா்திருத்தக் கொள்கை (2021-22), முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2022 ஜூலையில் அப்போதைய ஆம் ஆத்மி அரசால் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2023-24 முதல் தற்போதைய கொள்கை தொடா்கிறது. தற்போதைய கொள்கை, பின்னா் செப்டம்பா் 2022-இல் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், புதிய கலால் கொள்கையின் வரைவு திட்டத்தைத் தயாரிக்குமாறு முதல்வா் ரேகா குப்தா கடந்த ஆண்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். வெளிப்படைத்தன்மையுடன் தரமான மதுபான விநியோகத்தை உறுதி செய்யும் புதிய கொள்கையை உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போதுள்ள கொள்கையின் கீழ், நான்கு தில்லி அரசு நிறுவனங்கள் நகரம் முழுவதும் சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை இயக்குகின்றன.