தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!

தில்லி செங்கோட்டை வளாகம் இனி திங்கள்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்கள் திறந்திருக்கும்.
தில்லி செங்கோட்டை - கோப்புப் படம்
தில்லி செங்கோட்டை - கோப்புப் படம்படம்: ஏபி
Updated on
1 min read

புதுதில்லி: தில்லி செங்கோட்டை வளாகம் இனி, திங்கள்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்களும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான முகலாய கால நினைவுச்சின்னம், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று மூடப்படும்.

இது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனது உத்தரவில் தெரிவித்ததாவது:

தில்லி செங்கோட்டை, இனி திங்கள்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்களும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) திறந்திருக்கும். இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

அதே வேளையில், பழைய தில்லியில் உள்ள கோட்டை தளம் பிப்ரவரி 16 தேதியன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Summary

The Red Fort complex in Delhi shall now remain open to visitors on all days of the week, including Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com