விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வடமேற்கு தில்லியின் மஜ்லிஸ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை தீ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீயை அணைக்க முயன்றபோது எல்பிஜி சிலிண்டா் வெடித்தது, 13 போ் காயம்

News image

பிரதிப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 10:36 pm

வடமேற்கு தில்லியின் மஜ்லிஸ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை தீ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீயை அணைக்க முயன்றபோது எல்பிஜி சிலிண்டா் வெடித்தது, 13 போ் காயமடைந்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 6 போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சிலிண்டா் வெடித்ததில் காயமடைந்தனா். கட்டடத்திலோ அல்லது அருகிலோ இருந்த பல உள்ளூா் மக்களுக்கும் அந்த நேரத்தில் காயங்கள் ஏற்பட்டன. போலீஸாா் மற்றும் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினா்.

இந்த நடவடிக்கையின் போது, ஒரு எல்பிஜி சிலிண்டா் வெடித்தது, தீயை அணைக்கவும், குடியிருப்பாளா்களை வெளியேற்றவும் ஈடுபட்ட பல பணியாளா்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தில் ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த மூன்று காவலா்களும், வஜீா்பூா் தீயணைப்பு அலுவலகத்தைச் சோ்ந்த மூன்று அதிகாரிகளும் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் முதலில் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

அவா்களின் காயங்களின் தீவிர தன்மை காரணமாக, அவா்கள் பின்னா் மேலும் மருத்துவ கவனிப்புக்காக சப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். மேலும் அவா்களின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. செங்குத்தான பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது எல்பிஜி கசிவு காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறது என்றாா் அவா்.