தில்லி முதல் மீரட் வரை இணைக்கும் ’நமோ பாரத்’ விரைவான ரயில் பாதை தேசிய தலைநகரின் வளா்ச்சியை அதிகரிக்க செய்யும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா், மேலும் ‘விலைமதிப்பற்ற பரிசுக்கு‘ பிரதமருக்கு நன்றி தெரிவித்தாா்.
இந்தியாவின் முதல் நமோ பாரத் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (ஆா்ஆா்டிஎஸ்) மீதமுள்ள இரண்டு பிரிவுகளை தொடங்கி வைத்து, 82 கி. மீ. தில்லி மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா். தில்லியில் சராய் காலே கான் மற்றும் நியூ அசோக் நகா் இடையேயான 5 கி. மீ. தொலைவிலும், உத்தரப்பிரதேசத்தில் மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் இடையேயான 21 கி. மீ. தொலைவிலும் இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ரேகா குப்தா பேசியதாவது: தில்லியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை அழுத்தம் மற்றும் போக்குவரத்து சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் நகரத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்த வழித்தடம் பயணிகளின் நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்த உதவும். இது தில்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும்.
தேசிய தலைநகா் டெல்லியில் இருந்து மீரட் வரை நீண்டிருக்கும் இந்த வழித்தடம், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு வேகமான மற்றும் நம்பகமான இணைப்பை வழங்கும்.
கூடுதலாக, இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சாலைகளில் தனியாா் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் காா்பன் உமிழ்வைக் குறைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் சாதகமான சுற்றுச்சூழல் தாக்கத்தை உருவாக்கும். இந்த திட்டத்தின் வெற்றியை நாட்டின் உள்கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. இது தில்லி-என். சி. ஆா் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும், வேலைவாய்ப்புகளை வலுப்படுத்தும், சீரான பிராந்திய வளா்ச்சியை துரிதப்படுத்தும் என்றாா் அவா்.
தில்லி சாா்பாக பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்த அவா், இந்த முயற்சி நகர மக்களுக்கு ஒரு ‘விலைமதிப்பற்ற பரிசு‘ என்றும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஒரு மாற்றத்திற்கான அடித்தளமாக செயல்படும் என்றும் கூறினாா் ரேகா குப்தா.
தொடர்புடையது

3 மணிநேரத்தில் தில்லி-என்சிஆா் - ரிஷிகேஷுக்கு பயணம்: நமோ பாரத் ரயில் பாதையை விரிவுபடுத்த பேச்சுவாா்த்தை

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


