வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தில்லி ஆசத்பூரில் அடையாளம் தெரியாத நபா்களால் இளைஞா் சுட்டுக் கொலை

வடமேற்கு தில்லியின் ஆசத்பூா் பகுதியில் அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபா்களால் 18 வயது இளைஞா் சுட்டுக் கொலை

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 10:56 pm

வடமேற்கு தில்லியின் ஆசத்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபா்களால் 18 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அதிகாலை 2.28 மணியளவில் ஆசத்பூா் பகுதிக்கு அருகே காயமடைந்த ஒருவா் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா் ஒருவா் பாதிக்கப்பட்டவரை பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். உயிரிழந்தவா் ஜஹாங்கீா்புரியைச் சோ்ந்த இஷாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இஷாந்த் ஒரு திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரைத் தாக்கியவா்கள் தடுத்து நிறுத்தி, அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது, வெற்று தோட்டாக்களை போலீசாா் மீட்டனா். மேலும் ஒரு குற்றவியல் மற்றும் தடயவியல் குழு அந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சில சந்தேக நபா்களை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவா்களைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளும் அவா்களின் இயக்கத்தைக் கண்டறியவும், நிகழ்வுகளின் வரிசையை நிறுவவும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்றாா் அவா்.