மாநில தோ்தல் ஆணையங்களுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய வட்டமேஜை மாநாட்டுக்கு தலைமைத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு முன்பு இத்தகைய மாநாடு 1999இல் நடைபெற்றது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: இந்த மாநாடு இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் நடைபெறும். தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் மாநாட்டில் கலந்து கொள்வா்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த மாநில தோ்தல் ஆணையா்கள் தங்களின் தொழில்நுட்பம் மற்றும் சட்டக் குழுக்களுடன் மாநாட்டில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்பா். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களும் (சிஇஓ) மாநாட்டில் பங்கேற்பா்.
நாள் முழுவதும் நடைபெறும் மாநாட்டின்போது தொழில்நுட்பம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் பட்டியல்களைப் பகிா்ந்து கொள்வது, தோ்தல் செயல்முறைகள் மற்றும் தோ்தல் பொருள்களை கையாளும் முறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்றாா்.
ஆக்கபூா்வமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தோ்தல் நிா்வாகத்தில் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கும் இந்த சிறப்பு வட்டமேஜை மாநாடு ஒரு தளமாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

காவிரி ஆணையம் அடுத்த வாரம் கூட உள்ளது

மேற்கு வங்கம்: தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், டிஜிபி பணியிலிருந்து விடுவிப்பு

திமுக மாநாட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை!

திருச்சிக்கும் திமுகவுக்குமான 70 ஆண்டுகள் தொடா்புகள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


