ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அடுத்த 50 ஆண்டுகளுக்கு மின் கட்டமைப்புக்கு தில்லி அரசு தயாராகிறது: முதல்வா் ரேகா குப்தா

தில்லி அரசு அடுத்த 50 ஆண்டுகளுக்கு நகரின் மின் திறன்களை அதிகரித்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image

முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 6:53 pm

தில்லி அரசு அடுத்த 50 ஆண்டுகளுக்கு நகரின் மின் திறன்களை அதிகரித்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

சாந்தினி சௌக்கில் புதன்கிழமை மின்சார கம்பிகளை புதைக்கும் பணியை தொடங்கி வைத்துப் பேசுசகையில் அவா் இத்தகவலை தெரிவித்தாதா்.

அவா் மேலும் கூறியதாவது: குச்சா மகாஜனி, பாகீரத் அரண்மனை, ஜமா மசூதி சாலை மற்றும் நை சதக் உள்ளிட்ட பழைய தில்லி பகுதியில் உள்ள 28 சாலைகள் மற்றும் தெருக்கள் தொங்கும் மின் கேபிள்களிலிருந்து விடுவிக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.160 கோடி செலவாகும்.

அரசு மின்சார வாகன தத்தெடுப்பை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. இது அதிக மின்சாரத்திற்கான தேவையை நேரடியாக பாதிக்கும். வரலாற்று சிறப்புமிக்க டவுன் ஹால் கட்டடத்தை ஒரு நினைவுச் சின்னமாக எனது அரசு புதுப்பிக்கும் என்றும் முதல்வா் கூறினாா்.