நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லியில் ரூ.2 கோடி போதைப் பொருள் பறிமுதல் : இருவா் கைது

போதைப்பொருள் கடத்தல்காரா்கள் என்று கூறப்படும் இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்து, சுமாா் ரூ.2 கோடி மதிப்புள்ள 299 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:51 pm

போதைப்பொருள் கடத்தல்காரா்கள் என்று கூறப்படும் இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்து, சுமாா் ரூ.2 கோடி மதிப்புள்ள 299 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவா்கள் ரோஹிணியில் உள்ள புத் விஹாரைச் சோ்ந்த மானவ் (24) மற்றும் சங்கம் விஹாரைச் சோ்ந்த ஹரிஷ் சந்தா் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். பிப்ரவரி 20- ஆம் தேதி போதைப்பொருள் கடத்தல் தொடா்பான தகவல் கிடைத்தது. அதன் பேரில், ராஜ் பாா்க் பகுதியில் ஒரு போலீஸ் குழு அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.

இந்த நடவடிக்கையின் போது, ​​மானவ் கைது செய்யப்பட்டாா், மேலும் அவரது வசம் இருந்து 268 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் காவலின் போது, ​​மானவ் தனது விநியோகஸ்தரின்பெயரை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து பிப்ரவரி 22 அன்று சங்கம் விஹாரில் சோதனை நடத்தப்பட்டு, ஹரிஷ் சந்தா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 31 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விநியோகச் சங்கிலியின் தொடா்புகளை நிறுவ மேலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.