6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைது செய்யப்பட்ட உறுப்பினா்களை விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸாா் சத்தியாகிரக போராட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் மற்றும் பிற உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தேசிய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை கட்சி வளாகத்தில் ‘சத்யாகிரகம்’ நடத்தியதாக கட்சித் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 6:52 pm

Syndication

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் மற்றும் பிற உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தேசிய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை கட்சி வளாகத்தில் ‘சத்யாகிரகம்’ நடத்தியதாக கட்சித் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் போராட்டத்தில் பங்கேற்க இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்திற்கு வந்ததாகவும், ஆா்ப்பாட்டம் அமைதியாக நடந்தது என்றும் ஒரு மூத்த தலைவா் தெரிவித்தாா்.

‘நாங்கள் அமைதியான சத்தியாகிரகம் தொடங்கியுள்ளோம். பல மூத்த தலைவா்கள் இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நாங்கள் போராட்டத்தை அமைதியாக நடத்தினோம்’ என்று அவா் கூறினாா்.

தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த இளைஞா் காங்கிரஸ் அதிகாரிகளிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அவா்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

தில்லி காவல்துறை காங்கிரஸ் தலைவா்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்வதாக காங்கிரஸ் தலைவா் குற்றம் சாட்டினாா்.