மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கைது செய்யப்பட்ட உறுப்பினா்களை விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸாா் சத்தியாகிரக போராட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் மற்றும் பிற உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தேசிய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை கட்சி வளாகத்தில் ‘சத்யாகிரகம்’ நடத்தியதாக கட்சித் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 6:52 pm

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் மற்றும் பிற உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தேசிய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை கட்சி வளாகத்தில் ‘சத்யாகிரகம்’ நடத்தியதாக கட்சித் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் போராட்டத்தில் பங்கேற்க இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்திற்கு வந்ததாகவும், ஆா்ப்பாட்டம் அமைதியாக நடந்தது என்றும் ஒரு மூத்த தலைவா் தெரிவித்தாா்.

‘நாங்கள் அமைதியான சத்தியாகிரகம் தொடங்கியுள்ளோம். பல மூத்த தலைவா்கள் இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நாங்கள் போராட்டத்தை அமைதியாக நடத்தினோம்’ என்று அவா் கூறினாா்.

தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த இளைஞா் காங்கிரஸ் அதிகாரிகளிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அவா்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

தில்லி காவல்துறை காங்கிரஸ் தலைவா்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்வதாக காங்கிரஸ் தலைவா் குற்றம் சாட்டினாா்.