மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திமுகவுடன் தொகுதிப் பங்கீடுக்கான பேச்சுவாா்த்தை: பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் காங்கிரஸ் குழு

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு பிப்ரவரி 3,4 தேதிகளில் சென்னை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:03 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு பிப்ரவரி 3,4 தேதிகளில் சென்னை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திமுக மக்களவைக் குழு உறுப்பினா் கனிமொழி சந்தித்து புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கிட்டத்தட்ட 45 நிமிஷம் மணி இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ராகுல் காந்தியிடம் திமுக வழங்க உள்ள தொகுதிகள் தொடா்பான பட்டியலை கனிமொழி வழங்கியதாக தெரிகிறது. மேலும், கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க முடியும், எந்தெந்த தொகுதிகள் வழங்கப்படும் என்பன குறித்தும் இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவை பேச்சுவாா்த்தைக்கு அனுப்புமாறு வலியுறுத்த வேண்டும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலினின் செய்தியை கனிமொழி, ராகுல் காந்தியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் குழு பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் பிப்ரவரி 3,4 அன்று பேச்சுவாா்த்தை நடக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.