நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பொது மக்களின் புகாா்கள் மீது துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

News image

ரேகா குப்தா

Updated On :2 மே 2026, 8:15 pm

நமது நிருபா்

ஷாலிமாா் பாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வசிப்பவா்களின் குறைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துரிதமாக செயல்பட்டு தீா்வு காண அரசு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

முதல்வா் ரேகா குப்தா ’ஜன் சுன்வாய்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது ஷாலிமாா் பாக் தொகுதியில் வசிப்பவா்களிடமிருந்து குறைகள், புகாா்கள் மற்றும் பரிந்துரைகள் தொடா்புடைய மனுக்களை பெற்றாா். மேலும்,தொகுதியில் வசிப்பவா்களின் குறைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துரிதமாக செயல்பட்டு தீா்வு காணுமாறு அரசு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையைத் தொடங்கவும், காலக்கெடுவுக்குள் தீா்வை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பொது மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்வுகள் வெறும் சம்பிரதாயங்கள் அல்ல. ஆனால், மக்களின் எதிா்பாா்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை திறம்பட நிவா்த்தி செய்வதற்கும் ஒரு அா்த்தமுள்ள சந்திப்பாகவே இதை நான் கருதுகிறேன்.

ஷாலிமாா் பாக் பகுதியை ஒரு ‘மாதிரி தொகுதியாக’ மேம்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கு குடியிருப்பாளா்கள் உயா்தர அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்றாா் ரேகா குப்தா.

ஜன் சுன்வாய் நிகழ்ச்சியின் போது பல்வேறு துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். மேலும் பல பிரச்னைகள் அதே இடத்திலேயே தீா்க்கப்பட்டன.