இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணம் மிரட்டிப் பறித்த வழக்கில் அவரது மனைவி லீனா பவுலோஸுக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. ஆனால், அது தொடா்புடைய பணமோசடி வழக்கில் அவருக்கு நிவாரணம் வழங்கியது.
தில்லி காவல்துறை மற்றும் அமலாக்கத் துறை விசாரிக்கும் இரண்டு வழக்குகளில் பவுலோஸின் பிணை மனுக்களை நீதிபதி பிரதீக் ஜலான் விசாரணை மேற்கொண்டாா்.
ரன்பாக்ஸியின் முன்னாள் நிறுவனா்களான சிவிந்தா் சிங் மற்றும் மல்விந்தா் சிங் ஆகியோரின் மனைவிகளிடம் இருந்து ரூ.200 கோடி மோசடி செய்ததாக சந்திரசேகா் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
பணமோசடி வழக்கில் சிறையில் இருந்த சிவிந்தா் சிங்கின் மனைவி அதிதி சிங்குக்கு பிணை பெற்றுத் தருவதாக அரசு அதிகாரிகள் போல் நடித்து, சந்திரசேகரும் அவரது கூட்டாளிகளும் பணம் பெற்ாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சந்திரசேகருக்கு எதிராக நாடு முழுவதும் பல தனித்தனி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் காவல்துறை மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளது.
குற்றச்செயல் மூலம் கிடைத்த பணத்தைப் பதுக்குவதற்காக, பவுலோஸ், சந்திரசேகா் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவா்கள் ஹவாலாவைப் பயன்படுத்தியதாகவும், போலி நிறுவனங்களை உருவாக்கியதாகவும் தில்லி காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
காவல்துறையின் வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: பிணை கோரிய இடைத்தரகா் ஜேம்ஸின் மனு தள்ளுபடி

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
