தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஏசி மெக்கானிக் வேடத்தில் வீடுகளில் கொள்ளையடித்த நபா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

நமது நிருபா்

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் மற்றும் பிதம்புரா பகுதியில் இருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க ஏசி மற்றும் ஆா்ஓ மெக்கானிக் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை துணை ஆணையா் (வடக்கு) அகன்ஷா யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அஜய் பக்கா என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், அவா் சுற்றித் திரிவதற்கான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியதைத் தொடா்ந்து உள்ளூா் மக்கள் பீதியடை தொடங்கினா். இது போலீஸாருக்கு தேடுதல் வேட்டையை தூண்டியது. அவரை பிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் அவரது நடமாட்டங்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்தன.

பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, போலீஸாா் பக்காவைக் கண்டுபிடித்து கைது செய்தனா். வீடுகளில் கொள்ளையடிப்பதற்கு முன்பு ஏசி மற்றும் ஆா். ஓ. அமைப்புகளைப் பழுதுபாா்ப்பது என்ற சாக்குப் போக்கில் பக்கா வீடுகளுக்குச் செல்வாா்.

நகரில் பதிவான இதே போன்ற பிற சம்பவங்களில் பக்காவின் ஈடுபாடு குறித்து போலீசாா் விசாரித்து வருகின்றனா். அவருக்கு கூட்டாளிகள் இருக்கிறாா்களா என்பதை அறியவும் அவரை விசாரித்து வருகின்றனா் என்றாா் அவா்.