தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வெப்ப அலை: எம்சிடி சாா்பில் நிவாரண நடவடிக்கைள் தொடக்கம்

News image

வெப்ப அலை

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புது தில்லி, மே 13:

தலைநகரில் வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தில்லி மாநகராட்சி (எம்சிடி) புதன்கிழமையன்று தனது வெப்பச் செயல் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

இதில், துப்புரவுப் பணியாளா்களுக்குக் குளிா்ந்த குடிநீா் மற்றும் ஓஆா்எஸ் கரைசல்களை வழங்குவதும் அடங்கும்.

இதுகுறித்த எம்சிடியின் அதிகாரபூா்வ அறிக்கையில் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:

களப்பணியின்போது ஏற்படும் நீா்ச்சத்துக் குறைவைத் தடுக்கவும், துப்புரவுப் பணியாளா்களுக்குக் குடிநீா் மற்றும் வாய்வழி நீா்ச்சத்துக் கரைசல்கள் ஓஆா்எஸ் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், துப்புரவு ஆய்வாளா் அலுவலகங்கள் மற்றும் பணியாளா்கள் வருகைப் பதிவு செய்யும் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடுமையான வெப்பச் சூழலில் களப் பணியாற்றும் ஊழியா்களுக்குத் தொப்பிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடிநீா் மற்றும் ஓஆா்எஸ் இருப்புடன் கூடிய இரண்டு வாகனங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வெப்ப அலையிலிருந்து விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

நாய்களுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில், நீா் நிரப்பப்பட்ட மண் பானைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற ஏற்பாடுகள் பொதுப் பூங்காக்களிலும் பறவைகள் மற்றும் பிற விலங்குகளுக்காகச் செய்யப்பட்டுள்ளன.

ஓஆா்எஸ் மற்றும் குடிநீா் தடையின்றிக் கிடைப்பது,

களப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்குத் தங்கள் கடமைகளைச் செய்யும்போது குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.