சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள் - த.இராமலிங்கம்; பக்.112; ரூ.90; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 10:41 am IST

சாமானியனுக்கான சட்டங்கள் - த.இராமலிங்கம்; பக்.112; ரூ.90; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
ஒருவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றாலும், எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அப்படிச் செல்கிற ஒருவருக்கு நடப்பிலுள்ள சட்டங்களைப் பற்றியும், காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றால், அவருடைய மனதில் பயம் புகுந்து கொள்வதோடு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அலைய நேரிடுகிறது.
இந்தக் குறையைப் போக்கும்விதமாக சாமானிய மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச சட்ட அறிவை இந்நூல் புகட்டுகிறது.
காவல்துறை ஒருவரை அரெஸ்ட் வாரண்ட் இல்லாமல் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யலாம்? அரெஸ்ட் வாரண்டுடன் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யலாம்? அப்படி கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் வர என்ன செய்ய வேண்டும்? ஜாமீனில் வெளிவருவது, பரோலில் வெளிவருவது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? நீதிமன்றங்களின், காவல்துறையின் அதிகார எல்லைகள் எவை? நீதிமன்ற நடைமுறைகள் எவை? வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கும், வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக் கொள்வது? ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும்? குடும்பநல நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன? என அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்களைப் பற்றி இந்நூல் மிக மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது. சாமானிய மக்களுக்கும் பயன்படும் சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.