டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை)

இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை) - ம.திருமலை; பக்.220; ரூ.;160; மீனாட்சி புத்தகநிலையம், மதுரை-1; )0452 - 2345971.

News image
Updated On :28 ஜனவரி 2018, 7:08 pm

ம.திருமலை

இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை) - ம.திருமலை; பக்.220; ரூ.;160; மீனாட்சி புத்தகநிலையம், மதுரை-1; )0452 - 2345971.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகிய நூல் ஆசிரியர், இன்றைய வாழ்க்கை மதிப்பீடுகளை பழைய தமிழ் இலக்கியங்களில் கண்டு நமக்கு இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார்; விளக்குகிறார். 
பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பல கருத்துகள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். இன்றைய வாழ்க்கைக்கு பழைய இலக்கியங்கள் வழிகாட்டவும் செய்யும் என்பதை பல சான்றுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களினூடே பல கருத்துகள் விளக்கப்படுவது உள்ளத்தைத் தொடுகிறது. 
"இனிய காண்க', "சங்க இலக்கியத்தில் உணர்வுசால் நுண்ணறிவு', "திருவள்ளுவர் குறிப்பிடும் மென்திறன்கள்', " தன் மதிப்புணர்வு', "ஆராய்ந்து தெளிதல்' உள்ளிட்ட 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியங்கள் அக்காலச் சமூகச் சூழ்நிலையின் பின்னணியில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். எனினும் அந்த இலக்கியங்கள் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகள் இன்றைக்கும் பொருந்துபவையாக இருக்க வேண்டும். அப்படிப் பொருந்தும் கருத்துகளை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்நூல். இன்று என்பது நேற்றின் தொடர்ச்சி என்பதையும் புரிய வைக்கிறது. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளைக் கூறும் பயனுள்ள நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.