ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

காந்தி  விநோபா;  திருமலை; பக்.288; ரூ.100; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, சென்னை - 600 018. 

வன்முறைக்கு மாற்றாக அகிம்சையை முன்னெடுக்கவும்;  சமூகத்தில் நீ என்ன மாற்றம் கொண்டு வர விரும்புகிறாயோ, அதை முதலில் நீ உன் வாழ்வில் கொண்டு வர ஒரு சிறு பணியையாவது உடனே செய்யவேண்டும் என்றும் மகாத்மா காந்தியும் விநோபா பாவேயும் வலியுறுத்தினர். இவ்விரு ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய பகுதிகளைத்  தாங்கி மாணவர் பதிப்பாக நூல் வெளிவந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவெறி காரணமாக, ஆங்கிலேயர்களால் காந்தி அவமதிக்கப்பட்டார். இதற்கு மறுநாள் குதிரை வண்டி பயணத்திலும் காந்தி அவமதிக்கப்பட்டபோது,  ஆங்கிலேயப் பயணிகளே தடுத்து நிறுத்தினர் என்பது அறியப்படாத செய்தி.

'ஆஸ்ரமத்துக்கு ஆசி பெற வருவார்கள். ஆனால் நமது ஆஸ்ரமத்தையே ஆசீர்வதிக்க வந்தவர்தான் அவர்' என்று விநோபா பாவே குறித்து மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பலதரப்பட்ட மக்களை புரிந்துகொள்ள அவரவர் தாய்மொழி மூலமாக தொடர்பு கொண்டால்தான் சாத்தியப்படும் என்று விநோபா கருதினார். வேலூர் சிறையில் விநோபா இருந்தபோது தமிழ் கற்றுள்ளார்.  திருக்குறள், பாரதியார் பாடல்கள், தமிழ் இலக்கியங்களில் விநோபா அடிகளுக்கு நல்ல பயிற்சி இருந்துள்ளதையும், 'ழ' என்ற எழுத்து தமிழில் இருப்பதையும், தமிழ் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தி எழுத்துகளில் சில மாறுதல்களை அவர் செய்துள்ளதையும் நூல் பதிவு செய்துள்ளது.  நூலில் உள்ள சான்றிதழ் தேர்வுத் திட்டம், அகிம்சை கருத்துகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.