பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

மற்றுமொருமுறை மகாபாரதம் - சத்யதேவ்; பக்.216; ரூ.200; வானதி பதிப்பகம்,  சென்னை-17; ✆ 044-2434 2810.

ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதம் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை உள்ளடக்கிய மகாபாரதத்தை வியாசர் எழுதினார். மகாபாரதம் படிக்கும்போது, மனதில் எழும் தர்க்கரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், அக்கால சரித்திரத்தை மனதத்துவ நாவலைப் போல நாடக வடிவில் சுவையாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.

பாண்டவர்கள், அம்பை, அரவான், விகர்ணன், யுயுத்ஸூ, சஞ்சயன்,  விதுரன், நகுலன், அசுவத்தாமன், யமன், சகாதேவன், ஏகலைவன் முதலியோர் நிகழ்த்தும் தனிமொழி உரைகள் நூலை நன்றாகப் படிக்கத் தூண்டுவதுடன், அறிந்திராத அதிசயத் தகவல்களைத் தருகின்றன. 

சகாதேவனின் ஆற்றல், சகுனியை அழிப்பது போன்றவை சுவாரசியமாகவே செல்கிறது.  கௌரவர்களில் ஒருவர் கூட நல்லவர்கள் இல்லையா என்று திரௌபதி எழுப்பும் கேள்விகளைப் படிக்கும்போது மனம் நொறுங்குகிறது.

18 கட்டுரைகளாக இடம்பெற்றிருக்கிறது. இதனை நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான சுருக்க வடிவம் என்றே கூறலாம். பெண் பாத்திரங்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறி, பெண்ணியச் சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கின்றன.

இவற்றைப் படிக்கும்போது, நவீன யுகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நினைவுக்கு வருகின்றன. பாதுகாத்துவைத்து படிக்க ஏற்ற நூல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.