விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிரிட்டிஷ் வந்தேறிகளின் வம்புப் பிரசாரம்

உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றவர்களா அல்லது அது வெறும் பிரமையா? என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறது இந்நூல்.

News image
Updated On :2 மார்ச் 2026, 12:34 pm

தினமணி செய்திச் சேவை

பிரிட்டிஷ் வந்தேறிகளின் வம்புப் பிரசாரம் - பி.எஸ்.சர்மா; தெலுங்கிலிருந்து தமிழில் - ராஜி ரகுநாதன்; பக்.264; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், சென்னை -600127, ✆ 8148066645.

இந்தியாவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பிரிட்டிஷார் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதற்கு முக்கியமான ஆயுதமாக விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டனர்.

ஆரியர்- திராவிடர் கொள்கை, பிராமண எதிர்ப்பு, ஆங்கிலமே சிறந்தது, சத்தற்ற உணவு, ஏழை தேசம், ஆதாரமற்ற மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் எவ்வாறெல்லாம் பிரிட்டிஷார் இந்தியா குறித்து எதிர்மறை கருத்துகளைப் பரப்பினர் என்பதை இந்நூல் தகுந்த விளக்கங்களுடன் வெளிப்படுத்துகிறது.

இந்தியர்களின் வரலாற்றுப் பெருமை, தன்னம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் திட்டமிட்டு பிரசாரம் செய்ததன் மூலம் பிரிட்டிஷார் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர்.

உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றவர்களா அல்லது அது வெறும் பிரமையா? என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறது இந்நூல்.

பிரித்தாளும் சூழ்ச்சியின் பிதாமகர்களான பிரிட்டிஷாரின் கொள்கைகளை அடியொற்றி, இன்றைய இந்திய அரசியல்வாதிகளும் அன்றைய பொய்ப் பிரசாரத்தை வளர்த்து வருவதைக் கோடிட்டு உணர்த்துகிறார் நூலாசிரியர்.

பிரிட்டிஷாரின் ஆதாரமற்ற புரட்டுகளைத் துல்லியமாக வெளிச்சம் போட்டு காட்டுவதோடு, இந்தியப் பாரம்பரியத்தின் பெருமைகளை அசைக்க முடியாத ஆதாரங்களோடு இந்நூல் ஆவணப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.