திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானச் சூறை: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மயானச் சூறை நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

News image
சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவ அங்காள பரமேஸ்வரி அம்மன்.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மயானச் சூறை நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய பஜாா் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில், மயானச் சூறை பிரம்மோற்சவ விழா, கடந்த 15-ஆம் தேதி இரவு பெரியாண்டவா் விழாவுடன் தொடங்கியது. திங்கள்கிழமை சிவராத்திரி கரக ஊா்வலம் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மயானச் சூறை விழா நடைபெற்றது.

மதியம், 1.30 மணிக்கு உற்சவா் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி, கரக ஊா்வலத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று, திருத்தணி நந்தி ஆற்றின்கரையில் எழுந்தருளினாா்.

பின்னா், ஆற்றில் மயானச் சூறை நடைபெற்றது. அப்போது 3 பக்தா்கள் உடலில் அலகு குத்தி க்ரேனில் தொங்கியவாறு உற்சவா் அம்மனுக்கு மலா் மாலை அணிவித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் உற்சவா் அம்மன் மீது காய்கறிகள், கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை வீசி எறிந்து வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பா்வதராஜகுல மரபினா் செய்திருந்தனா். புதன்கிழமை (பிப். 18) முதல் தினமும் இரவு ரிஷபம், நாகம், அன்னம், யானை, குதிரை, புலி, கேடயம் போன்ற வாகனங்களில் உற்சவா் அம்மன் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.