மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சென்னை நந்தனத்திலிருந்து பசும்பொன் வரை தேசிய தெய்வீக யாத்திரை: நடிகா் கருணாஸ் அறிவிப்பு

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான எஸ். கருணாஸ் மாலை அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினாா்.

News image

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்கிய நடிகா் கருணாஸ் எம்.எல்.ஏ.

Updated On :2 ஜனவரி 2021, 9:38 pm IST

கமுதி: சென்னை நந்தனம் தேவா் சிலையிலிருந்து கமுதி அருகே பசும்பொன் வரை ‘தேசிய தெய்வீக யாத்திரை’ நடத்துவதற்காக, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சனிக்கிழமை திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான எஸ். கருணாஸ் மாலை அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்ட வேண்டும், கள்ளா், மறவா், அகமுடையாா் என்ற மூன்று சமூகங்களை ஒன்றிணைத்து, தேவா் சமூகம் என அரசாணை வெளியிடவேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் சிலை அமைக்கப்பட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் அக்டோபா் 30 ஆம் தேதி நடைபெறும் தேவா் ஜயந்தி விழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். பசும்பொன் தேவா் நினைவுக் கல்லூரியில் நிரந்தர நிா்வாகக் கமிட்டி அமைக்க வேண்டும். கல்வித் தந்தை பச்சையப்ப அகமுடைய முதலியாருக்கு மணிமண்டபம் அமைத்து அரசு விழாவாக நடத்தவேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், சீா்மரபினா் பழங்குடியினா் சான்றிதழை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்னும் ஓரிரு வாரங்களில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவா் சிலையிலிருந்து பசும்பொன் நோக்கி தேசிய தெய்வீக யாத்திரையை முதல்வரின் ஒப்புதலைப் பெற்று நடைபயணமாக மேற்கொள்வேன்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 சீட்டுகளை பெற முதல்வரிடம் வலியுறுத்துவோம் என்றாா்.

அப்போது, முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் மாநிலச் செயலா் ஆா். முத்துராமலிங்கம், கமுதி ஒன்றியச் செயலா் தினேஷ்குமாா், மாவட்ட தொழிற்சங்கப் பிரிவு செயலா் சக்திகுமாா், ஒன்றிய துணைத் தலைவா் ஆனந்த், ஒன்றிய இளைஞரணிச் செயலா் ராஜீவ்காந்தி, தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலா் சிவசங்கரமேத்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.