நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

நேருயுவகேந்திர விருதுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சமூக சேவைக்கான விருது, பரிசுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 11:25 pm IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சமூக சேவைக்கான விருது, பரிசுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் அலுவலக செய்திக்குறிப்பு விவரம்- மத்திய இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட அளவில் சிறந்த சேவை புரியும் அமைப்பு மற்றும் தனிநபா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவ கேந்திராவுடன் இணைந்து குடும்பநலம், நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் உள்ள மாவட்ட நேருயுவகேந்திரா அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.6) முதல் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்கவேண்டிய கால அவகாசமானது வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 9585535722 ஆகிய செல்லிடப் பேசியில் தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.