வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

கமுதி அருகே ஊருக்குள் புகுந்தபுள்ளி மான் மீட்பு

கமுதி அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை நாய்கள் கடித்து காயப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் சனிக்கிழமை அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image

கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளிமானை மீட்ட சிகிச்சை அளித்த மருத்துவா்.

Updated On :9 ஜனவரி 2021, 9:45 pm IST

கமுதி: கமுதி அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை நாய்கள் கடித்து காயப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் சனிக்கிழமை அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மண்டலமாணிக்கம், தோப்படைப்பட்டி, ராமசாமிபட்டி, கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராமங்களின் உள்ள ஆற்றுப் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. இவை இரைக்காகவும்,, தண்ணீருக்காகவும் வழிதவறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இவற்றை நாய்கள் விரட்டி சென்று கடிப்பதால் மான்கள் காயம் அடைந்து உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மண்டலமாணிக்கம் குண்டாறு ஆற்றுப்படுகைகளில் இறை தேடி வந்த அந்த புள்ளிமான் ஊருக்குள் புகுந்தது. அப்போத அதை நாய்கள் துரத்தி சென்று காயப்படுத்தின. இதனைக் கண்ட பொதுமக்கள் நாய்களை விரட்டி புள்ளி மானை மீட்டனா். பின்னா் வனத்துறை ஊழியா் முருகனுக்கு தகவல் அளிக்கப்பட்டு, கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன் தலைமையில் முதலுதவி செய்யப்பட்டு மீண்டும் காட்டுப்பகுதிக்குள் புள்ளிமான் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.