ஜெயங்கொண்டம், ஏப்.8: அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழா மார்ச் 31- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் கலியுக வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதல் தேரில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார். இரண்டாம் தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் ஆதீனம் பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாச்சி உள்ளிட்டோர் செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகெüரி தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

