இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

திருநாகேஸ்வரம் ராகுபகவானுக்கு ரூ. 3 லட்சத்தில் தங்கமுலாம் கவசம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீராகுபகவான் உற்சவ மூர்த்திக்கு ரூ. 3 லட்சத்தில் தங்கமுலாம் பூசிய கவசத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 7:43 am IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீராகுபகவான் உற்சவ மூர்த்திக்கு ரூ. 3 லட்சத்தில் தங்கமுலாம் பூசிய கவசத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

நவக்கிரகங்களில் ராகுதலமாகத் திகழும் இந்தக் கோவிலில் ராகுபகவான் நாக கன்னி, நாகவள்ளி இரு கன்னிகையுடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். மூலவர் நாகநாதபெருமானின் பிரகாரத்தில் ராகுபகவான் உத்சவர் சன்னதி உள்ளது.

இந்தக் கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஸ்ரீகாந்த், ராகுபகவான் உற்சவருக்கு சாத்தக்கூடிய வகையில், ரூ.3 லட்சத்தில் திருவாச்சி, பீடத்துடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தை வழங்கினார்.

இதையொட்டி, கோவிலில் சிறப்பு ஹோமமும், அதைத்தொடர்ந்து, ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன.

பிறகு, ராகுபகவான் உற்சவருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.