/

சாலியமங்கலம் பாகவதமேளா தொடர்ந்து 370வது ஆண்டு விழா

தஞ்சை ஜில்லா சாலியமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி உத்சவமும் அதனையொட்டி பாகவதமேளா நாட்டிய நாடகங்களும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :1 மே 2015, 12:34 pm

எஸ். வெட்கட்ராமன்

தஞ்சை ஜில்லா சாலியமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி உத்சவமும் அதனையொட்டி பாகவதமேளா நாட்டிய நாடகங்களும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சிகள்:

மே 1 - கோவை ஜெயராம பாகவதர், அம்பத்தூர் சி.எஸ்.எம் சுப்ரமண்யம் பங்கேற்கும் ஸ்ரீ சீதாகல்யாண உற்சவம் (பாகவத சம்பிரதாயப்படி)

மே 2 - மாலை 6 மணி ப்ராண பிரதிஷ்டை ஆராதனை, இரவு 7 மணி - ஸ்ரீ நிவாஸப் பெருமாள் கருட சேவை, இரவு 10 மணி - ஸ்ரீ பிரகலாத சரித்திரம், பாகவதமேள நாட்டிய நாடகம்

மே 3 - இரவு 10 மணி - ஸ்ரீருக்மணி பரிணயம், பாகவதமேள நாட்டிய நாடகம்

மே 4 - காலை 7 மணி - "ருக்மணி கல்யாணம்" பாகவத சம்பிரதாயப்படி, இரவு 7 மணி - ஆஞ்சநேய உற்சவம்

மேற்படி நாட்டிய நாடகங்கள் ஆந்திர பாஷையில் பரத சாஸ்திர அபிநயத்துடன் தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் காலம் 1645ம் ஆண்டு முதல் இடைவிடாமல் 370 ஆண்டுகளாக நிர்விக்னமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு ஸ்ரீ லட்சுமி நரஸிம்ம பாகவத மேள பக்த சமாஜத்தை செல் 9894937368, 9443674366-ஐ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.