திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை, சன்னதி தெருவில் உள்ள அப்பர் சுவாமிகள் திருமடத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்-அலங்காரம் நடைபெற்றது.
காலை 11.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் மடத்தில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழாவும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு திருநாவுக்கரசு தெரு, வேடியப்பன் கோயில் தெரு, செல்லநேரித் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் அப்பர் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குருபூஜைக்கான ஏற்பாடுகளை அப்பர் சுவாமிகள் திருமடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திரம்: கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலி

வதந்தி - 2 டீசர்!

கைகட்டி நின்றவர் இன்று எங்கள் இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனைப் பற்றி பேசுகிறார் - சேகர்பாபு

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

